கர்ப்பிணியை பலாத்காரம் செய்த சாமியார் !

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

கர்ப்பிணிப் பெண்ணை மானபங்கப்படுத்திய போலிச் சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

உதகை மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா என்ற பகுதியைச் சேர்ந்த மகாதேவன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி.கர்ப்பிணியான இவருக்கு நீண்ட நாளாக தீராத தலைவலி இருந்து வந்தது.

சிலரின் ஆலோசனைப்படி, அப்பகுதியைச் சேர்ந்த குருசாமி எனும் மோகன்குமார் என்ற சாமியாரிடம் சென்று ஆலோசனைகேட்டுள்ளார் ஜெயலட்சுமி. தனது வீட்டில் இரவில் வைத்து நிர்வாண பூஜை செய்தால் தலைவலி போய் விடும் என கூறியுள்ளார்மோகன்குமார்.

இதையடுத்து அவரது வீட்டில் தங்க சம்மதித்துள்ளார் ஜெயலட்சுமி. துணைக்கு அவரது கணவர் மகாதேவனும் சென்றார்.

அப்போது மகாதேவனுக்கு மயக்க மருந்து கலந்த மதுவைத் தந்துள்ளார் போலிச் சாமியார். அதை அருந்தி போதை ஏறிமயக்கமான மகாதேவனை வெளியில் தூக்கிப்போட்டுவிட்டு, பூஜை என்ற பெயரில் ஜெயலட்சுமியை நிர்வாணப்படுத்திஅவரிடம் அத்து மீறியுள்ளார் போலிச் சாமியார்.

இதற்கு போலிச் சாமியாரின் மனைவி சிவபாக்கியமும் உடந்தையாக இருந்துள்ளார். ஜெயலட்சுமியை வலுக்கட்டாயமாககற்பழித்துள்ளார்.

இதையடுத்து அங்கிருந்து ஓடி வந்த ஜெயலட்சுமி தனது கணவரைத் தெளிய வைத்து அவரிடம் நடந்ததைக் கூறினார்.உடனடியாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே, போலீஸார் விரைந்து வந்து போலிச் சாமியாரையும் அவரதுமனைவியையும் கைது செய்தனர்.

கர்ப்பிணிப் பெண்ணிடம் உடலுறவு கொண்டால் தனது மாந்த்ரீக சக்தி அதிகரிக்கும் என்றும், அதனால் அதிகமாக பணம்ஈட்டலாம் என்றும் தன்னிடம் கணவர் கூறியதால், இந்த கற்பழிப்புக்கு உடந்தையாக இருந்ததாக சாமியாரின் மனைவிசிவபாக்கியம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+