பலியிட தடை நீக்கம்: மசோதா நிறைவேற்றம்
சென்னை:
கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, கோவில்களில் ஆடு, கோழிகளைப் பலியிட தடைவிதிக்கப்பட்டது. இந்த சட்டம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கிராமப்புறங்களில் அரசுக்கு கடும் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ஆடு,கோழி பலியிட இருந்த தடையை தமிழக அரசு நீக்கியது. இதன் தொடர்ச்சியாகஅரசு பிறப்பித்த அவசர சட்டத்தை நீக்கும் வகையில் இன்று
சட்டசபையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஆடு, கோழி பலி தடைச் சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வழக்குகள்ஆகியவை காலாவதியாகி விட்டதாக என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications