ஒரே நாளில் 24 மானிய கோரிக்கைகள் தாக்கல்
சென்னை:
சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக 12 அமைச்சர்கள் இன்று ஒரே நாளில் 24 துறைகளுக்கான மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்தனர்.
சட்டமன்றக் கூட்டத் தொடர் குறுகிய நாட்களே நடத்தப்பட்டதால், இன்று மாராதான் போல மானியக்கோரிக்கைகள் தாக்கல் நடந்தது.
ஒரே நாளில் 24 துறைகளின் மானியக் கோரிக்கைகள் தாக்கலானாதால் கொள்கைக் குறிப்புகள், புத்தகங்கள்ஆகியவை உறுப்பினர்கள் முன் குவிந்தன. அவற்றை கொண்டு செல்வது கடினம் என்பதால், எழுந்து பேசியஅதிமுக எம்.எல்.ஏ. ராஜாங்கம், நாங்கள் தங்கி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் விடுதி அறைக்கு இந்தபுத்தகங்களைக் கொண்டு வந்து தர சபாநாயகர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.
முன்னதாக, கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மானியக் கோரிக்கைகளை தாக்கல் செய்து பேசுகையில்,விளையாட்டு மற்றும் உடல் பயிற்சிக் கல்வியில் தமிழகம் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்குகிறது. எனவேஇதற்கென தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டியது அவசியமாகிறது. சென்னை நகரில் இந்த புதிய உடற்பயிற்சி கல்விப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications