இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முறை சரியே: நீதிமன்றம்
சென்னை :
இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், புதியதாக பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கும்இடையே வயது மூப்பை கணக்கிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதியவர்கள் ஒரு வருடம் முழுவதும் நுழைவுத் தேர்வுக்காகத் தயார் செய்கிறார்கள்.அவர்களை, இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதி, நுழைவுத் தேர்வும் எழுதி, மருத்துவப்படிப்பில் சேரும்மாணவர்களுக்கு இணையாகக் கருதக் கூடாது. இம்ப்ரூவ்மென்ட் தேர்வு எழுதியவர்களுக்குத் தனியாக இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று கனியன் என்ற மாணவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி சுபாஷண் ரெட்டி, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர் அஹித்த தீர்ப்பின் விவரம்:
இம்ப்ரூவ்மென்ட் தேர்வுக்கான வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இத்தேர்வை எழுதும் மாணவர்கள்,கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் தான் வாங்கிய மதிப்பெண்களை திரும்ப ஒப்படைத்துவிடுகிறார்கள். அதன்பிறகு நேரத்தையும் பணத்தையும் செலவிட்டு, அனைத்து பாடங்களிலும் மறுபடியும் தேர்வு எழுதுகிறார்கள்.இத்தனைக்கும் பிறகு அவர் மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதிக்கப்படாவிட்டால், ஓராண்டாக அவர்மேற்கொண்ட முயற்சி வீணாகிவிடும்.
இம்ப்ரூவ்மென்ட் தேர்வு முறையை அரசே கொண்டுவந்துள்ளது. இதனால் இம்ப்ரூவ்மென்ட் மாணவர்களுக்காகதனியாக இடம் ஒதுக்க முடியாது. இத்திட்டத்தை அரசு திரும்பப்பெறாத வரையில், இம்ப்ரூவ்மென்ட் தேர்வுஎழுதிய மாணவர்களும், புதிய மாணவர்களோடு சேர்ந்து போட்டியிட தகுதி உள்ளது.
அதே நேரத்தில் வயதைக் கருத்தில் கொள்ளும்போது, புதிய மாணவரோடு இம்ப்ரூவ்மென்ட் மாணவரைஒப்பிடக்கூடாது. இரு இம்ப்ரூவ்மென்ட் மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களில் அதிகவயதுடையவருக்கு இடம் தரலாம். அதே போல புதிய மாணவர்கள் இருவர் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால்அவர்களில் ஒருவருக்கு வயது அடிப்படையில் இடம் தரலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications