சாப்ட்வேர் அதிபர்களை சந்திக்கிறார் தரம்சிங்
பெங்களூர்:
பெங்களூரில் இயங்கும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் தங்களது அடுத்தகட்ட விரிவாக்கத்திட்டங்களை சென்னை உள்ளிட்ட பிற மாநில நகரங்களுக்கு கொண்டு செல்லதிட்டமிட்டுள்ளதையடுத்து, சாப்ட்வேர் நிறுவனத் தலைவர்களின் கூட்டத்தை முதல்வர் தரம்சிங்அவசரமாகக் கூட்டியுள்ளார்.
பெங்களூரின் குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசிய சாப்ட்வேர் நிறுவன அதிபர்களை கேலி செய்யும்விதத்தில் கடந்த வாரம் தரம்சிங் பேட்டியளித்திருந்தார். பெங்களூரை விட்டு எந்த நிறுவனமாவதுபோகுமா என்றும் கேட்டிருந்தார்.
தங்களை இந்த அரசு முழுமையாகப் புறக்கணிப்பதாக கோபத்தில் உள்ள நிறுவனங்கள் புதியசாப்ட்வேர் திட்டங்ளை வேறு நகர்களுக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளன.
இதையடுத்து வரும் 10ம் தேதி சாப்ட்வேர் நிறுவன அதிபர்கள், முக்கிய அதிகாரிகளின் கூட்டத்தைதரம் சிங் கூட்டியுள்ளார்.
கர்நாடகத்தின் மொத்த வருவாயில் 3ல் ஒரு சதவீதம் சாப்ட்வேர் துறையிலிருந்து தான் வருகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications