For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலட்சுமி நாளை வாக்குமூலம் அளிக்கிறார்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

தென் மாவட்ட காவல்துறையையே தனது முந்தானைக்குள் வைத்திருந்த சிவகாசி பெண்மணி ஜெயலட்சுமி நாளைமதுரை உயர்நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ளார். அந்த சமயத்தில் அவர் வெளியிடப்போகும்காவல்துறையினரின் பெயர்களை அறிவதற்காக தமிழகமே மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது.

சிவகாசியைச் சேர்ந்த கலக்கல் பெண்மணி ஜெயலட்சுமி, 19 பேரை கல்யாணம் செய்துள்ளதாகவும், எஸ்.பி. முதல்சாதாரண ஏட்டு வரை தனது கருப்புக் கவர்ச்சியால் வளைத்துப் போட்டு பல விஷயங்களை சாதித்துள்ளதாகக்கூறப்படும் ஜெயலட்சுமி தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மதுரையில் உள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

நாளை அவர் நீதிபதி கற்பகவிநாயகம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவுள்ளார். அப்போது 19 பேரைகல்யாணம் செய்து கொண்ட விவாகரம், தன்னுடன் தொடர்பு வைத்திருந்த காவல்துறை அதிகாரிகள் விவரம்,அவர்கள் தன்னிடம் நடந்து கொண்ட விதம், யாரை எப்படி மோசடி செய்தேன் என்பது உள்ளிட்ட பலவிஷயங்களை வாக்குமூலமாக அளிக்கவுள்ளார்.

ஜெயலட்சுமி சொல்லப் போகும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை அறிய தென் மாவட்ட காவல்துறையினர்மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஜெயலட்சுமி விவகாரத்தால் பத்திரிக்கைகளில் தினசரி வெளியாகும்செய்திகளால் நாறிப் போயுள்ள தென் மாவட்ட காவல்துறையின் இமேஜ் அவரது வாக்குமூலத்திற்குப் பிறகுஇன்னும் மோசமாகுமா என்பது நாளை தெரிய வரும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X