தொடரும் இந்தியர்களின் உயிர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இராக்கில் இந்தியர்களைக் கடத்தி வைத்துள்ள தீவிரவாதிகளுடனான பேச்சுவார்த்தை 8வது நாளாகதடைபட்டுள்ளது.

தீவிரவாதிகளின் நிதிக் கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்க, இந்தியர்களை பணிக்கு அமர்த்தியகுவைத் கல்ப் லிங்க் நிறுவனம் முன் வரவில்லை. இதையடுத்து பேச்சு தடைபட்டுள்ளது.

தீவிரவாதிகளுடன் நேரடியாகப் பேச விரும்புவதாகவும், தீவிரவாதிகளால் அறிவிக்கப்பட்டதூதரான துலாய்மியுடன் இனியும் பேச மாட்டோம் எனவும் கல்ப் லிங்க் நிறுவனம் கூறிவிட்டது.

ஆனால், இதற்கு தீவிரவாதிகளிடம் இருந்து பதில் வரவில்லை. இதனால் அந்தர்யாமி, திலக்ராஜ்,சுக்தியோ சிங் ஆகிய இந்திய டிரக் டிரைவர்கள் தொடர்ந்து தீவிரவாதிகளின் பிடியிலேயே இருந்துவருகின்றனர். இவர்கள் ஜூலை 21ம் தேதி கடத்தப்பட்டனர்.

இராக்கில் அமெரிக்கப் படையினருக்கு உணவு சப்ளையில் ஈடுபடும் பணியை கல்ப் லிங்க்நிறுவனம் கைவிட வேண்டும், இராக்கில் இருந்து வெளிறே வேண்டும், பலூஜா நகரில் அமெரிக்கத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட 250 குடும்பத்தினருக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் ஆகியகோரிக்கைகளை தீவிரவாதிகள் முன் வைத்தனர்.

இதை ஏற்க கல்ப் லிங்க் நிறுவனம் முன் வந்தது. ஆனால், இந்தக் கோரிக்கைகள் தவிர பெரும் நிதியைதீவிரவாதிகள் கேட்பதாகத் தெரிகிறது. இதை ஏற்க அந் நிறுவனம் தயாராக இல்லை.

இந்த விஷயத்தில் துலாய்மி டபுள் கேம் ஆடுவதாகவும் அந் நிறுவனம் கருதுகிறது. இதனால், அவர்மூலமான பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தது.

தீவிரவாதிகளுடன் நேரடியாகவோ அல்லது இன்னொரு தூதர் மூலமாக பேச்சு நடத்தத் தயார் எனஅந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+