3 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayalakshmiஜெகஜால ஜெயலட்சுமியுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட 3 காவல்துறையினர் திடீர் என்று பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகாசியைச் சேர்ந்த பெண் ஜெயலட்சுமி விவகாரம் தென் மாவட்டங்களை கலங்கடித்துள்ளது. காவல்துறையினர்மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் அவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட 3 காவல்துறையினர் திடீர் என்று பணி இடைநீக்கம்செய்யப்பட்டுள்ளனர். மதுரை திடீர் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இளங்கோவன், தலைமைக் காவலர்கண்ணன், நிலக்கோட்டை காவல் நிலைய முன்னாள் சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் ஆகிய 3 பேரும்தான்சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள்.

இளங்கோவன் தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு தனது காலில் விழுந்து கெஞ்சியதாக ஜெயலட்சுமிதெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் ஜெயலட்சுமி தெரிவித்திருந்தார்.இதில் ஷாஜகான் ஏற்கனவே இந்த விவகாரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இளங்கோவன் தவிர ஷாஜகான், கண்ணன் உள்ளிட்டோர் ஜெயலட்சுமிக்கு தாலியையும் கட்டி பலமாதங்கள் குடும்பமும் நடத்தியுள்ளனர். இவர்களைப் போலவே பலரிடமும் தாலி கட்டிக்கொண்டுள்ளார் ஜெயலட்சுமி.

இவர்களில் பெரும்பான்மையினர் காவல்துறை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரிடம்மனைவி மாதிரி நடித்துக் கொண்டே அவரிடம் பணத்தை அபேஸ் செய்துவிட்டு அடுத்தகாவல்துறை அதிகாரியைக் கைப்பிடித்துள்ளார் ஜெயலட்சுமி. இப்படி இந்த வண்டு தாவிய போலீஸ்மலர்களின் எண்ணிக்கை 20யையும் தாண்டுமாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+