சுயாட்சி அடிப்படையிலேயே பேச்சு: புலிகள்
கொழும்பு:
தமிழர் பகுதிகளில் எங்கள் தலைமையில் இடைக்கால சுய நிர்வாக அமைப்பை உருவாக்க சிங்கள அரசுஒப்புக்கொண்டால் மட்டுமே தடைபட்டுள்ள பேச்சுகளை மீண்டும் தொடங்க முடியும் என்று விடுதலைப் புலிகள்திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் எஸ்.பி. தமிழ்ச் செல்வன் இது தொடர்பாக கூறியதாவது:
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சுய நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி, அதை புலிகளின்முழுக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். இதை ஒப்புக் கொண்டால்தான் அமைதிப் பேச்சுகளில்தொடர்ந்து ஈடுபட முடியும்.
இதற்கு மாற்றாக இலங்கை அரசு சார்பில் முன் வைக்கப்படும் யோசனைகள் அனைத்தையும் நிராகரிக்கிறோம்.அவை தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றுவதாக இல்லை. பேச்சு வார்த்தைக்குநாங்கள் வரக்கூடாது என்ற முனைப்பிலேயே இந்த யோசனைகளை இலங்கை அரசு கூறுவதாகவே எங்களுக்குத்தோன்றுகிறது என்று தமிழ்ச் செல்வன் கூறினார்.
நார்வே பிரதமருடன் மஹிந்த சந்திப்பு:
இதற்கிடையே நார்வே பிரதமர் ஜெல் மேக்னே போண்டிவிக்கை இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷேசந்தித்தார். சமாதானப் பேச்சு விரைவில் தொடங்கும் என்று நம்புவதாக நார்வே பிரதமரிடம் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications