ஜெயலட்சுமிக்கு 50 போலீசாருடன் தொடர்பு !!
மதுரை:
ஜெயலட்சுமியுடன் 50க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் தொடர்பு வைத்திருந்ததை வாக்குமூலத்தில்குறிப்பிடுவோம் என்று அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
காவல்துறையைக் கலக்கி வரும் சிவகாசி ஜெயலட்சுமி, நீதிபதிகள் பாலசுப்பிரமணியன், மாசிலாமணி ஆகியோர்கொண்ட மதுரை உயர் நீதிமன்ற பெஞ்சு முன் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அப்போது ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் அழகர்சாமி கூறியதாவது:
வாக்குமூலம் விஷயமாக ஜெயலட்சுமியிடம் நாங்கள் பேசும்போதெல்லாம் போலீசார் உடன் இருந்தார்கள்.அவர்களை வைத்துக்கொண்டு எங்களால் வாக்குமூலம் தயார் செய்ய முடியவில்லை. எனவே எங்களுக்குக் கூடுதல்கால அவகாசம் வேண்டும். மேலும் நாங்கள் ஜெயலட்சுமியிடம் விசாரிக்கச் செல்லும்போது அவருடன் போலீசார்இருக்கக்கூடாது என்றார்.
இதையடுத்து வாக்குமூலம் சமர்பிக்க வரும் திங்கள்கிழமை வரை கால அவகாசம் அளிப்பதாக நீதிபதிகள்அறிவித்தனர்.
பின்னர் ஜெயலட்சுமியை போலீசார் சொக்கிகுளத்தில் உள்ள மகளிர் காப்பகத்திற்கு மீண்டும் கொண்டு சென்றனர்.
நீதிமன்ற வளாகத்தில் ஜெயலட்சுமியின் வழக்கறிஞர்கள் அழகர்சாமி, வெங்கடேசன் ஆகியோர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலட்சுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, தவறான வழிமுறைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.திங்கள்கிழமை ஜெயலட்சுமி தரப்பில் நாங்கள் தாக்கல் செய்யவிருக்கும் வாக்குமூலத்தில், அவருடன் 50க்கும்மேற்பட்ட காவல்துறையினர் தொடர்பு வைத்திருந்ததை பெயர் விவரத்துடன் தெரியப்படுத்துவோம்.
அதில் 30 போலீஸ் இன்ஸ்பெக்டர்களும், போலீஸ் உயர் அதிகாரிகளும் உண்டு. போலீஸ்காரர் ஒருவர்ஜெயலட்சுமிக்கு கார் டிரைவராகவே இருந்திருக்கிறார். திங்கள்கிழமை நிச்சயம் வாக்குமூலத்தைத் தாக்கல்செய்வோம். மேலும் அவகாசம் கேட்க மாட்டோம் என்றனர்.