பெட்ரோல், டீசல், கேஸ் மீது வரிகள் குறைப்பு
டெல்லி:
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியையும் (கஸ்டம்ஸ் வரி) கலால் வரியையும் (எக்ஸைஸ்வரி) மத்திய அரசு குறைத்துள்ளது. இதன்மூலம் இவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இப்போது பெட்ரோல், டீசல் மீது 20 சதவீத கஸ்டம்ஸ் வரி விதிக்கப்படுகிறது. இது 15 சதவீதமாகக்குறைக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் மீதான வரி 10 சதவீதத்தில் இருந்து5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல பெட்ரோல் மீதான எக்ஸைஸ் வரி 26 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாகவும், டீசல்மீதான வரி 11 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாகவும், மண்ணெண்ணெய் மீதான வரி 16சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
பண வீக்கம் 7.6 சதவீதத்தைத் தொட்டுள்ளதாலும், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலைதொடர்ந்து உயர்ந்து வருவதாலும் நாட்டில் பெட்ரோல், டீசலின் விலையை கடுமையாக உயர்த்தவேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு வருவதால் விலை உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கஇந்த வரிக் குறைப்பை அரசு அமலாக்கியுள்ளது.
இந்த வரிகள் குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 5,350 கோடி இழப்பு ஏற்படும் என்றுதெரிகிறது.
உலகிலேயே எரிபொருள்கள் மீது மிக அதிகமாக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியா முன்னணியில்இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications