மக்கள் தொகை: 2050ல் இந்தியா..
வாஷிங்டன்:
2050ம் ஆண்டு வாக்கில் உலக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி, இந்தியா முதலிடத்தைப்பிடித்துவிடும் என்ற கவலையான புள்ளிவிவரத்தை வாஷிங்டன் மக்கள் தொகை ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
தற்போது 1,087 மில்லியனாக இருக்கும் இந்திய மக்கள் தொகை 2050ம் ஆண்டில் 1,628 மில்லியனாகஅதிகரிக்கும். இப்போது 1,300 மில்லியனாக இருக்கும் சீன மக்கள் தொகை, 2050ல் 1,437 ஆக அதிகரிக்கும்.
அமெரிக்காவின் மக்கள் தொகை 294 மில்லியனில் இருந்து 420 மில்லியனாக அதிகரிக்கும். இதில் பாதிப் பேர்வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர்களாக இருப்பார்கள்.
தற்போது 159 மில்லியனாக இருக்கும் பாகிஸ்தான் மக்கள் தொகை 295 மில்லியனாக அதிகரிக்கும்.
வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் இடையே மக்கள் தொகை அதிகரிப்பில் சமச்சீரற்ற தன்மைஅதிகரிக்கும். ஏழை நாடுகளில்தான் 99 சதவீத மக்கள் தொகை அதிகரிப்பு இருக்கும். அதே நேரத்தில் பணக்காரநாடுகளில் மக்கள் தொகை அதே வீதத்திலோ அல்லது அதைவிடக் குறைவாகவோ இருக்கும்.
ஐரோப்பா நாடுகளில் மக்கள் தொகை குறையும். மேற்கு ஆசிய நாடுகளில் 186 மில்லியன் அளவுக்கு மக்கள்தொகை உயரும்.
தற்போது 6,396 மில்லியனாக இருக்கும் உலக மக்கள் தொகை 2050ல் 9,276 மில்லியனாக அதிகரிக்கும்.
இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications