தொடரும் லாரி வேலை நிறுத்தம்: பேச்சு தோல்வி
சென்னை - டெல்லி:
தேசம் தழுவிய லாரிகள் வேலை நிறுத்தம் இன்று மூன்றாவது நாளை எட்டியது. இதையடுத்து லாரிஉரிமையாளர்களுடன் இன்று மத்திய நிதியமைச்சகம் மீண்டும் பேச்சு நடத்தியது. ஆனால், அதில்சமரசம் ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்,
லாரிகளுக்கு சேவை வரியை அரசு விதிக்கவே இல்லை. சரக்குப் போக்குவரத்துக்கான புக்கிங்ஏஜென்டுகளுக்குத் தான் சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த ஏஜென்டுகள் சங்கத்தினர்தங்கள் சுயநலம் காரணமாக, லாரி உரிமையாளர்களுக்குத் தவறான தகவல் தந்து போராட்டத்தில்குதிக்க வைத்துள்ளனர்.
அவர்களை நம்பி போராட்டத்தில் குதித்து லாரி உரிமையாளர்கள் தங்களுக்கும், நாட்டுக்கும்நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்றார்.
இந் நிலையில் மத்திய அரசுடன் தாங்கள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும்எட்டப்படவில்லை என அகில இந்திய மோட்டார் போக்குவரத்துக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் இதுவரை அத்தியாவசியப் பொருள்களின் சப்ளைபாதிக்கப்படவில்லை என்றாலும், ஆங்காங்கே, காய்கறிகள், பழங்களின் விலை உயரஆரம்பித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தால் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் பகுதிகளில் இருந்து பிறமாநிலங்களுக்கு ஜவுளிகளை அனுப்பும் பணியும், நாமக்கல், சேலம் பகுதிகளில் இருந்துமுட்டைகளை அனுப்பும் பணியும், சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் இருந்து தீப்பெட்டிகள்,வெடிகளை அனுப்பும் பணியும் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போய்விட்டது.
அதே போல ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மோட்டார் சைக்கிள்கள், வாகன இயந்திரங்கள்,உதிரிப் பாகங்களை வட மாநிலங்களுக்கு அனுப்புவதும் முடங்கியுள்ளது.
உடனடியாக ஜவுளிகளை ரயில் மூலம் பிற மாநிலங்களுக்கு அனுப்ப ரயில்வேதுறை உதவியுடன்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்குள் பெரும்பாலான லாரிகள் வழக்கம்போல் ஓடிக் கொண்டுள்ளன. ஆனால், வெளிமாநில லாரிகள் வருவது நின்றுபோய்விட்டது.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications