போலீஸ் காவலிலிருந்து மாஜி எம்எல்ஏ எஸ்கேப்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரவிசங்கர் போலீஸ் காவலிலிருந்துதப்பியோடி விட்டார்.
விருதுநகர் மாவட்டம் விளாத்திகுளம் சட்டசபைத் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ரவிசங்கர். இவர் போதைப்பொருள் கடத்தியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் வேறு ஒரு வழக்கில் திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்ட அவர் சென்னை திரும்புவதற்காக பாளையங்கோட்டை பஸ் நிலையத்திற்கு போலீசாரால்அழைத்து வரப்பட்டார்.
அப்போது போலீஸாரை ஏமாற்றி விட்டு ரவிசங்கர் தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவருக்குக் காவலுக்குச்சென்ற சென்னை ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை உள்ளிட்ட 4 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications