ஆபாச பாடல்கள்: நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
தமிழ் சினிமாவில் ஆபாசமான வார்த்தைகளுடனும், மோசமான நடன அசைவுகளுடனும் பாடல்கள் வருவதைஎதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜெயின் பள்ளி முதல்வர் சீதா ரஞ்சித் என்பவர் தாக்கல் செய்த மனுவில்கூறியிருப்பதாவது:
சாமி படத்தில் வரும் கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா,ஜேஜே படத்தில் வரும் மே மாதம் 98ல் மேஜரானேனே ஆகிய பாடல்கள் மிக ஆபாசமாக இருந்தன. பாடல்களில்மகா ஆபாசமாக உடை அணிந்து ஆடுகிறார்கள்.
இது நம் கலாச்சாரத்தை பாதிப்பதோடு, இளைஞர்கள், மாணவ, மாணவியர்களின் மனதை பாதிக்கிறது. இதனால்பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தப் பாடல்களுக்கு தணிக்கைக் குழு எப்படி சான்றிதழ் அளித்ததுஎன்பது ஆச்சரியமாக உள்ளது.
அந்தப் பாடல்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். அவற்றைத் திரையிடவும், ஒலிபரப்பவும் தடை விதிக்கவேண்டும். அந்தப் பாடல்களை எழுதிய பாடலாசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இத்தகைய பாடல்கள் வருங்காலங்களில் இடம் பெறாமல் தடுக்க தணிக்கைக் குழுவில் ஆசிரியர்களைஉறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கற்பக விநாயகம் ஆகியோர் முன் விசாரணைக்குவந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இதற்கு 2 வாரத்தில் பதில் அளிக்குமாறு தணிக்கை குழு அதிகாரிக்கும்,மத்திய அரசு செய்தித் துறை செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.