காவிரி: கர்நாடகத்தின் மாஸ்டர் பிளான்
பெங்களூர்:
காவிரி நடுவர் மன்ற நீதிபதிகளை மாற்றக் கோரி வழக்குத் தொடர்ந்து, அதன் இறுதித் தீர்ப்பைத்தாமதப்படுத்ததும் தந்திரத்தில் ஈடுபட கர்நாடகம் திட்டமிட்டுள்ளது.
இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டிய கர்நாடக அரசு, நடுவர் மன்றம் குறித்த தனதுநிலையை விரைவில் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவிக்கப் போவதாகக் கூறியுள்ளது.
காவிரி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை விரைவில் வெளியிட முடிவு செய்த, நடுவர் மன்றக் உறுப்பினர்கள் இருவர்காவிரிப் பாசனப் பகுதிகளை நேரில் பார்வையிட முடிவு செய்திருந்தனர். இதற்கு நடுவர் மன்றத் தலைவர்அனுமதி அளிக்கவில்லை. ஆனால், அதையும் மீறி ஆய்வுப் பணி மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தனர்.
இந் நிலையில் இந்த இரு உறுப்பினர்களின் காவிரி டெல்டா பயணத்தை எதிர்த்து பெங்களூரைச் சேர்ந்த காந்திசாகித்ய சங்க அறக்கட்டளை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தனது மனுவில், நடுவர் மன்ற உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் உறுப்பினர்களை மாற்றவேண்டும், புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக நடுவர் மன்றம் செயல்பட்டுவருகிறது என்றாலும், அதன் இறுதித் தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை என்று சாகித்ய சங்கம் குறிப்பிட்டிருந்தது.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடுவர் மன்ற நீதிபதிகளின் காவிரி டெல்டா பயணத்துக்குத் தடை விதித்தது.மேலும் இது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்குஉத்தரவிட்டது.
இந் நிலையில் நடுவர் மன்ற பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்வது குறித்துஆலோசனை நடத்த இன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கர்நாடக அரசு கூட்டியுள்ளது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், அதைத்தாமதப்படுத்தும் நோக்கில் நடுவர் மன்ற உறுப்பினர்களை மாற்ற வேண்டும் என்று கோர கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என்ற, இந்த நடுவர் மன்றத்தில்இடைக்காலத் தீர்ப்பையே கர்நாடகம் இன்னும் அமல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications