வைகோ விஷயத்தில் ஜெ. மர்ம நாடகம்: கருணாநிதி
சென்னை:
வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க முடியாது என்று பூந்தமல்லிசிறப்பு நீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளதன் மூலம், தமிழக அரசின் மர்ம நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசுசிய கருணாநிதி கூறியதாவது:
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு பதவிக்கு வந்ததும் பொடா சட்டத்தை வாபஸ் பெறும்நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. ஆனால் பாஜக கூட்டணியினர் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அமளிசெய்து, நாடாளுமன்றத்தை முடக்கியதால் பொடா வாபஸ் சட்டத்தைக் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.
வைகோ மீதான பொடா வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று பொடா மறு ஆய்வுக் குழு தமிழக அரசுக்குஉத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9ம் தேதி வைகோ மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக தமிழகஅரசு பொடா நீதிமன்றத்தில் மனு செய்தது.
ஆனால் பொடா சட்டத்தை வாபஸ் பெறக் கூடாது என்று கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கூறிஅனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா கடிதம் எழுதினார். மேலும், பொடா சட்டத்தை வாபஸ் பெறக்கூடாது என்று பகிரங்கமாகவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
வஞ்சம் தீர்க்கும் முறையில் ஆட்சி நடத்தும் ஜெயலலிதாவின் ஆட்சியில் வாய்மைக்கும், அதற்கேற்ற வலுவானவாதத்திற்கும் ஒரு துளி கூட இடமில்லை என்பதை தற்போது பொடா நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் மூலம்தெரிய வந்துள்ளது.
மேலம், ஜெயலலிதாவின் பேச்சும், நடவடிக்கையும் மர்மம் நிறைந்தது என்று நான் கூறியது உண்மையாகிஇப்போது அவரது மர்ம நாடகம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications