ஜெ ஆவணங்கள்: மொழி பெயர்க்க தமிழாசிரியர்கள்
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடர்பான சுமார் 2,500 பக்கஆவணங்களை தமிழில் இருந்து கன்னடத்துக்கும் ஆங்கிலத்துக்கும் மொழி பெயர்க்கும் பணியில்தமிழாசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இந்தப் பணியில் தமிழாசிரியர்களின் உதவியை கர்நாடக அரசு நாடியுள்ளது.
கர்நாடகத்தில் பல தமிழ்ப் பள்ளிகளும், கல்லூரிகளில் தமிழ்த் துறைகளும் உள்ளன. அதில்பணிபுரியும் ஆசிரியர்களை இந்த மொழியாக்கப் பணியில் ஈடுபடுத்த கர்நாடக நீதித்துறை முடிவுசெய்தது. குறிப்பாக கல்லூரிப் பேராசிரியர்களைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
கன்னடத்தில் மொழி மாற்றம் செய்யப்படும் இந்த ஆவணங்களை உடனே ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்படுகின்றன.
இப்போது இந்த ஆவணங்கள் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியாக பச்சேபுரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சிறப்புநீதிமன்றத்துக்கு 5 கிளர்க்குகள், 2 உதவியாளர்கள், ஒரு டிரைவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு அரசுகாரும் ஒதுக்கப்பட்டுவிட்டது.
மொழி பெயர்ப்பு தொடங்கிய ஒரு வார காலத்தில் வழக்கின் விசாரணையும் தொடங்கும் என்றுகூறப்படுகிறது.