சென்னை- மதுரை இடையே அதிவேக புல்லட் ரயில்?
டெல்லி:
மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ட்ரெயின்களைத் தயாரிக்க ரயில்வே அமைச்சகம்திட்டமிட்டுள்ளது.
இதற்கு மத்திய திட்டக் கமிஷன் நிதித்துறை மற்றும் பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கிவிட்டது. ஜப்பானியதொழில்நுட்பத்துடன் இந்த ரயில் தயாரிக்கப்படவுள்ளது.
மத்திய ரயில்வே வாரியத் தலைவரான ஆர்.கே. சிங் இதனைத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் முதல் ரயிலை சென்னை- மதுரைக்கு இடையே விட நிதியமைச்சர்ப.சிதம்பரம் முயற்சி மேற்கொண்டுள்ளதாத் தெரிகிறது.
இந்தத் திட்டம் சாத்தியமானால் சென்னையில் இருந்து 2 மணி நேரத்தில் மதுரையை அடைய முடியும்.
இப்போது நாட்டிலேயே அதி வேகமாக ஓடும் ரயில் டெல்லி-மும்பை இடையிலான ராஜதானி எக்ஸ்பிரஸ் தான்.இது மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்கிறது. விரைவில் டெல்லி-ஆக்ரா இடையே 150 கி.மீ. வேகத்தில் செல்லும்ரயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications