பொடா ரத்து : கலாம் ஒப்புதல் வழங்கினார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பொடா சட்டத்தை ரத்து செய்யும் வகையில் மத்திய அமைச்சரவை கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஒப்புதல் வழங்கினார்.
கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெடா சட்டத்தை ரத்து செய்யஅவசர சட்டம் கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டது. பின்னர், குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக அந்த அவசர சட்டம்அனுப்பப்பட்டது.
இந் நிலையில் கலாம் இதற்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டார். மேலும் பொடாவுக்கு மாற்றாக சட்ட விரோதநடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவும் கலாம் ஒப்புதல் வழங்கினார்.
பொடா சட்டம் ரத்தானாலும், அச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்ட 32 தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து சட்ட விரோதநடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புகளாகக் கருதப்படும்.












Click it and Unblock the Notifications