விநாயகர் ஊர்வலம்: சென்னையில் பலத்த பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ள விநாயகர் சிலைஊர்வலங்களையொட்டி மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நகரில் வைக்கப்பட்டுள்ள 600க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுகடலில் கரைக்கப்படவுள்ளன.

இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா ஆகிய அமைப்புகள் ஊர்வலமாக சிலைகளைஎடுத்துச் சென்று கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

பட்டினப்பாக்கம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாலம், திருவெற்றியூர்யுனிவர்சல் கார்பொரன்டம் பின்புறம் உள்ள கடற்கரை ஆகிய இடங்களில் சிலைகளைக் கரைக்கபோலீஸார் அனுமதி அளித்துள்ளனர்.

ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள பாதைகளில் மட்டுமே சிலைகளை எடுத்துச் செல்லவேண்டும் என்றும் தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறைஆணையர் நிடராஜ் எச்சரித்துள்ளார்.

இந்த ஊர்வலங்களையொட்டி சென்னை நகரில் 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாகவே இந்த ஊர்வலங்களுக்கான பாதுகாப்புகள் தொடர்பாக போலீசார்ஒத்திகைகள் பார்த்தவண்ணம் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+