கிருஷ்ணா நீர்: ஜெ. இன்று ஹைதராபாத் பயணம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று ஹைதராபாத் பயணம் செய்கிறார். அவருடன் உயர்மட்ட அதிகாரிகள் குழுவும் செல்கிறது.
சென்னையில் நிலவும் கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தை தீர்ப்பதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியை வலியுறுத்தி ஜெயலலிதா இரண்டு முறை கடிதம் எழுதினார்.
கடந்த 15ம் தேதியன்று தமிழக பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் நடராஜன் தலைமையிலான அதிகாரிகள் குழு கண்டலேறுஅணைக்குச் சென்று அணையின் நிலையைப் பார்வையிட்டு அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது.
இந் நிலையில் நெல்லூரில் நடந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்ட விழாவில் கலந்து கொண்ட மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர்டி.ஆர்.பாலு, கிருஷ்ணா நதியிலிருந்து சென்னைக்கு குடிநீர் வழங்குமாறு கோரி ஆந்திர முதல்வரை கேட்டுக் கொள்ளுமாறு கூறி தன்னைதிமுக தலைவர் கருணாநிதி அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதற்கு, அக்டோபர் 15ம் தேதிக்குள் கிருஷ்ணா நீர் சென்னைக்கு வந்து சேரும் என்று டி.ஆர்.பாலுவுக்கு முதல்வர் ராஜசேகர ரெட்டிபதிலளித்தார்.
இந் நிலையில் ஜெயலலிதா இன்று ஹைதராபாத் செல்கிறார். இன்று மாலை தனி விமானம் மூலம் ஹைதராபாத் செல்லும் ஜெயலலிதாவுடன்,தலைமைச் செயலாளர் பொறுப்பை வகிக்கும் நிதித்துறை செயலாளர் நாராயணன், பொதுப்பணித்துறை செயலாளர் பழனியப்பன்ஆகியோரும் செல்கிறார்கள்.
நாளை ராஜசேகர ரெட்டியை சந்தித்துப் பேசும் ஜெயலலிதா, கிருஷ்ணா நதி நீரை விடுவிப்பது குறித்து பேச்சு நடத்துவார்.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அதிகாரிகள் சென்னைக்குத் திரும்புகிறார்கள். ஜெயலலிதா மட்டும் ஒரு வாரம் ஹைதராபாத்தில் உள்ள தனதுதிராட்சை தோட்டத்தில் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications