விபச்சாரம்: மீட்கப்பட்ட பெங்களூர் பெண்கள்
சென்னை:
சென்னையில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெங்களூர் பெண்களை போலீஸார் மீட்டனர்.
சினிமா ஆசை காட்டி சில புரோக்கர்கள் வெளிமாநில பெண்களை தமி-ழ்நாட்டிற்கு அழைத்து வந்து கட்டாயவிபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக சென்னை மாநகர போலீஸ் கமி-ஷ்னர் நடராஜூக்கு தகவல் கிடைத்தது.
அதனையடுத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்த நடராஜ் உத்தரவிட்டார். அதன்படிவிபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் பலர் சிக்கினர்.
வேளச்சேரி விஜய நகர் பகுதியில் ஆண்களை விபச்சாரத்திற்கு அழைத்த புரோக்கர் திருப்பதி கைதுசெய்யப்பட்டான். அவன் பிடியில் இருந்த பெங்களூரை சேர்ந்த லதா (21) என்ற பெண்ணை போலீஸார் மீட்டனர்.
சேலையூர் அருகே உள்ள மாடப்பாக்கம் ஸ்ரீதேவி நகரில் ஒரு சொகுசு பங்களாவில் போலீஸார் திடீர் சோதனைநடத்தியபோது, அந்த வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெங்களூரைச் சேர்ந்த பிரியா (22), பிரியங்கா(22) ஆகியோரை போலீஸார் மீட்டனர். புரோக்கர்கள் ஜெயமாணிக்கம், வேல் முருகன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
சைதாப்பேட்டை-வேளச்சேரி ரோட்டில் சொகுசு காரில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெங்களூரை சேர்ந்தலட்சுமி- (21), அன்னு (24), ரம்யா (27), சுவேதா (26), தேவி (29) ஆகிய பெண்களை போலீசார் -மீட்டனர்.புரோக்கர்கள் ஜிடிசன், ராஜேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டதோடு, அவர்கள் வசமிருந்த கார் மற்றும்செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் தப்பி ஓடிய புரோக்கர்கள் மகேந்திரன், சரவணன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்