30ம் தேதிக்குள் சேது திட்ட அறிக்கை: பாலு
சென்னை:
வரும் 30ம் தேதிக்குள் சேது சமுத்திரத் திட்டத்தின் விரிவான திட்ட விவர அறிக்கை தயாராகி விடும் என்று மத்தியகப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
ரூ.2,000 கோடி மதிப்பிலான சேது சமுத்திர திட்டப் பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டப்படிமுறையாக நடைபெற்று வருகின்றன.
இத் திட்டத்தின் விரிவான முழு திட்ட விவர அறிக்கை இம் மாதம் 30ம் தேதிக்குள் தயாராகி விடும். இதனைஎல்.அன்ட் டி மற்றும் டென்மார்க்கில் உள்ள ரான்பால் நிறுவனம் ஆகியவை கூட்டு சேர்ந்து தயாரித்து வருகின்றன.
அறிக்கை தயாரானதும் அது பொது முதலீட்டு வாரியத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். பின்னர்மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும்.
இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சேது சமுத்திர கழகம் என்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின்முதல் கூட்டம் வருகிற சனிக்கிழமை சென்னையில் நடைபெறும் என்றார்.