அந்தமான் கப்பல் கொலை: கைதானவர் விடுதலை
சென்னை:
அந்தமானில் இருந்து சென்னை வந்த கப்பலில் நடந்த இஸ்ரேலியர் ஒருவரின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சமையல்காரரை விரைவு நீதிமன்றம் விடுதலை செய்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அந்தமானில் இருந்து எம்.வி.நன்கெளரி என்ற பயணிகள் கப்பல்சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது.
இந்தக் கப்பலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கோகன் கோயல் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த தனது காதலிகேத்தரினா எலிசபெத்துடன் (வயது 19) பயணம் செய்தார். கப்பலின் மேல்தளத்தில் எலிசபெத்துடன் தூங்கிக்கொண்டிருந்தபோது நள்ளிரவில் கோகன் கோயல் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கப்பலில் சமையல்காரராக பணிபுரிந்த ராஜேஷ்பால் என்பவரை சென்னை போலீஸார்கைது செய்தனர்.
ராஜேஷ்பால் மீது சென்னை விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிபாரதி, சந்தேகத்திற்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் ராஜேஷ் பாலை விடுதலை செய்து தீர்ப்புஅளித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ரசாயனப் பரிசோதனை, தடய அறிவியல் துறை மற்றும் கைரேகைப் பதிவுநிபுணர் அறிக்கை ஆகியவை சாட்சியத்தினை வலுப்படுத்தும் வகையில் அமையவில்லை. இந்த வழக்கில் புகார்பதிவு செய்யப்பட்ட நிலையில் இருந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவரை பல சந்தேகங்கள்உருவாகியுள்ளன.
எனவே, ஒரே ஒரு சந்தர்ப்ப சாட்சியத்தினைக் கொண்டு ராஜேஷ்பாலுக்கு தண்டனை வழங்க முடியாது. எனவே,வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
அந்தமான்-சென்னை கப்பலில் இஸ்ரேலிய பயணி கொலை
அந்தமான் கப்பல் கொலை: சமையல்காரர் கைது