அந்தமான்-சென்னை கப்பலில் இஸ்ரேலிய பயணி கொலை
சென்னை:
| அந்தமானில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கப்பலில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்த இஸ்ரேலியர்நடுக் கடலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
செக்ஸ் தகராறு காரணமாக நடந்ததாகக் கருதப்படும் இந்தக்கொலை தொடர்பாக கப்பல் ஊழியர்கள் 2 பேர் உள்பட 16 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதில் 8 பேர்பெண்கள். |
எம்.வி.நன்கெளரி என்ற பயணிகள் கப்பல் டிசம்பர் 4ம் தேதி போர்ட் பிளேரில் இருந்து சென்னை கிளம்பியது.இதில் இஸ்ரேலிய நாட்டைச் சேர்ந்த கோகன் கோயல் (27) என்ற சுற்றுலாப் பயணி இங்கிலாந்தைச் சேர்ந்த தனதுகாதலி கேத்தரினா எலிசபெத்துடன் (வயது 19) பயணம் செய்தார்.
கப்பலின் மேல் தளத்தில் எலிசபெத்தும் கோகனும் செக்சில் ஈடுபட்டுவிட்டுத் தூங்கிக் கொண்டிருந்த கோகனை நடுஇரவில் மர்ம நபர் ஒருவர் அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். கோகனின் அலறலையடுத்து விழித்துக்கொண்ட எலிசபெத் மேல் தளத்தில ஒருவர் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளார்.
இதையடுத்து கேப்டனுக்கு தகவல் தரப்பட்டது. இதன்பின் கேப்டன் கோர்த்வால் சென்னை போலீசை தொடர்புகொண்டார். கப்பல் துறைமுகத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவிலேயே நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டது.
சென்னை இணை கமிஷனர் சைலேந்திர பாபு தலைமையில் 50 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் 2 படகுகளில்கப்பலுக்கு விரைந்தனர்.
கொலையாளியை அடையாளம் காட்டமுடியும் என்று எலிசபெத் கூறியதையடுத்து அடையாள அணிவகுப்புநடத்தப்பட்டது. இதன் முடிவில் எலிசபெத் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் 2 கப்பல் ஊழியர்கள், 6ஆண்கள், 8 பெண்களை போலீசார் தங்களது காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
கப்பல் ஊழியர்கள சிலரும், சில ஆண்களும் கப்பலில் தன்னிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடக்கமுயன்றதாகவும் எலிசபெத் தெரிவித்துள்ளார். இவரும் கோகனும் கப்பலில் கண்டபடி கட்டிப்பிடித்து, செக்சில்ஈடுபட்டதாகவும் இதனால் அவர்களுக்கும் சில பயணிகளுக்கும், கப்பல் ஊழியர்களுக்கும் இடையே நடுக்கடலில்தகராறு நடந்ததாகவும் தெரிகிறது.
கோகனும் எலிசபெத்தும் கோவாவில் ஒருவரை ஒருவர் சந்தித்து நட்பாகி அங்கிருந்து அந்தமான் சென்றதும்தெரியவந்துள்ளது. மேலும் கப்பலின் மேல் தளத்தில் இக் கொலை நடந்துள்ளது. அங்கு செல்ல கப்பல்ஊழியர்களின் சிறப்பு அனுமதி வேண்டும்.
மேல்தளத்தில் கோகனும் எலிசெபத்தும் செக்சில் ஈடுபட்டதை பார்த்ததால் எலிசபெத்தை அடைய முடியாத யாரோதான் இந்தக் கொலையைச் செய்திருக்க வேண்டும் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
கோகனின் உடலில் ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த உடலைப் பெற்றுச்செல்லுமாறு டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு சென்னை போலீஸார் தகவல் அனுப்பியுள்ளனர்.
-
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
விஜயை வைத்து எந்த பயனும் இல்லை.. அதனால் தவெகவுடன் கூட்டணி பேசவில்லை.. அமித்ஷா சொன்ன விளக்கம் -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications