இலங்கை: விடுதலையான 15 மீனவர்கள் நாளை வருகை
ராமநாதபுரம்:
இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களில் 15 பேர் நாளை தமிழகம்திரும்புகின்றனர்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்திலிருந்து கடந்த 4-ம் தேதி 5 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 20 மீனவர்களைஇலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.
20 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசைப்படகுகளின் ஓட்டுனர்கள் 5 பேரைமட்டும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மற்ற மீனவர்களை தலைமன்னாரில் உள்ள இலங்கைகடற்படை முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து மீனவர்களை உடனே விடுவிக்கும்படி மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம் வேண்டுகோள்விடுத்தன. இந் நிலையில் தலைமன்னார் கடற்படை முகாமில் வைக்கப்பட்டிருந்த 15 மீனவர்களையும் விடுவித்துதமிழகத்திற்கு அனுப்பி வைக்கும்படி இலங்கை அரசு, அந்நாட்டு கடற்படைக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து நாளை காலை மீனவர்கள் 15 பேரையும் இந்திய கடல் எல்லைக்கு கொண்டு வர உள்ளதாகவும்,அங்கு வந்து அவர்களை அழைத்துச் செல்லும்படியும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைநிலையத்துக்கு இலங்கை கடற்படையினர் தகவல் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications