நதிகள் இணைப்பு: கலாமிடம் கால அட்டவணை
டெல்லி:
நதிகளை இணைக்கும் திட்டத்துக்கான கால அட்டவணையை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தாஸ் முன்ஷிகுடியரசுத்தலைவர் அப்துல் கலாமிடம் வழங்கினார்.
இது குறித்து நிருபர்களிடம் முன்ஷி கூறியதாவது:
நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பக் குழு தனது அறிக்கையைஇம்மாத இறுதிக்குள் அளிக்கும்.
இந்தியாவில் மொத்தமுள்ள 30 நதிகளில் 18 நதிகளை இணைப்பது குறித்த ஆய்வறிக்கையை தேசிய நீர் வளர்ச்சிமையம் அடுத்த ஆண்டு டிசம்பர் 31-க்குள் அளிக்கும்.
இத்திட்டத்தை நிறைவேற்ற ரூ. 5.6 லட்சம் கோடி தேவைப்படும். இத்திட்டம் தொடர்பாக பொதுக்கருத்தைஉருவாக்கும் வகையில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களைசந்தித்துப் பேசவுள்ளேன்.
நதிகள் இணைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துபிரதமர் மன்மோகன் சிங்கிடம் வரும் 11ம் தேதி அறிக்கை அளிக்கிறேன் என்று தாஸ் முன்ஷி கூறினார்.












Click it and Unblock the Notifications