பாஜக ரூ.4,000 கோடி ஊழல்: சிபிஐ விசாரணை

Subscribe to Oneindia Tamil

மாதேபுரா:

பாஜக ஆட்சியில் உணவு தானிய ஏற்றுமதியாளர்களுக்கு மானியம் வழங்கியதில் ரூ. 4,000 கோடி அளவுக்குமுறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாதேபுரா மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் ராஷ்டிரா ஜனதா தளம் கட்சியின் பப்பு யாதவுக்கு ஆதரவாகபிரசாரம் செய்ய மத்திய விவசாயத் துறை இணை அமைச்சர் அகிலேஷ் பிரசாத் சிங் வந்திருந்தார்.

அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

கடந்த பாஜக ஆட்சியில் உணவு தானிய ஏற்றுமதியாளர்களுக்கான மானியம் வழங்கியதில் உயர் அதிகாரிகளுடன்சேர்ந்து கொண்டு முறைகேடுகளில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்தப் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உணவு, சிவில் சப்ளை தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுபரிந்துரைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+