குளத்தை தூர் வாரிய வைகோ
திருநெல்வேலி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்த குளத்தை பொதுமக்களுடன் இறங்கி தூர் வாரினார்.
ஓய்வெடுக்க கலிங்கப்பட்டி வந்த வைகோவிடம் கிராமத்தில் பல்லாண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ள குளத்தைதூர் வார நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து வைகோ தானே களத்தில் இறங்கினார். அவரும், சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் எம்.பியும் மற்றும் கிராமமக்களுடன் இணைந்து தூர் வாரினர்.
பின்னர் நிருபர்களிடம் வைகோ பேசுகையில்,
குளம் நீண்ட காலம் தூர் வாரப் படாமல் இருந்தது. இதனை அரசு செய்தாலும் முழுமையான பணிகள்நடப்பதில்லை. 10 லட்சத்திற்கு கான்ட்ராக்ட் விட்டால் அதில் 2 லட்சத்திற்குதான் பணிகள் நடக்கின்றன. மீதிப்பணத்தை கான்ட்ராக்டர்களும், அதிகாரிகளும் எடுத்துக் கொள்கிறார்கள். எனவே, நாங்களே இந்த பணியைசெய்ய முடிவெடுத்தோம்.
நெல்லை மாவட்டத்திற்கு மேற்கு எல்லையில் செண்பகவல்லி அணைக்கட்டு கரையில் 25 ஆண்டுகளுக்கு முன்புஉடைப்பு எடுத்தது. இதனை சரி செய்ய முந்தைய எம்ஜிஆர் ஆட்சியின் போது கேரள அரசுக்கு, நமது அரசு ரூ.10லட்சம் கொடுத்தது. ஆனால், இன்னமும் அந்த உடைப்பை கேரளம் சரி செய்யவில்லை.
அந்த அணைக்கட்டு குறித்தும் ஆழியாறு பரம்பிகுளம் திட்டத்தை செயல்படுத்தக் கோரியும் கேரள முதல்வரைசந்திக்க உள்ளேன். அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தேன். அவர் எனது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்என்றார் வைகோ.