அதிமுக-பாஜக கூட்டணி தெளிவாக உள்ளது !
சென்னை:
பா.ஜ.க.- அதிமுக கூட்டணி மிகத் தெளிவாக இருப்பதாக பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் குமாரவேலுகூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆந்திராவில் காங்கிரஸ் அரசு நக்ஸலைட்டுகள் மீதான தடையை நீக்கியுள்ளது பேராபத்தை விளைவிக்கப்போகிறது. கடந்த 100 நாட்களில் நக்ஸலைட்டுகள் பல மடங்கு பலம் பெற்றுவிட்டனர். நிறைவேற்ற முடியாதகோரிக்கைகளை எல்லாம் கேட்டு வருகின்றனர். இருந்தாலும் அவர்களுடன் அரசு பேச்சு நடத்துகிறது.
நக்ஸல்களின் இந்த வளர்ச்சி தமிழகத்தை நிச்சயமாக பாதிக்கும். அவர்களை தமிழகத்தில் முளையிலேயே கிள்ளிஎறிய வேண்டும்.
புதிய வீராணம் திட்டத்தால் சென்னையில் குழாய் மூலம் குடிநீர் விடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால்கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் வராது என முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதை நம்புவோம்.
அதிமுக-பா.ஜ.க கூட்டணி மிகத் தெளிவாக உள்ளது. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி பற்றி பேசுவோம்(!).டெல்லியில் பா.ஜ.க. தலைவர்கள் பேசுவதைத் தான் ஜெயலலிதாவும் கூறுகிறார்.
பா.ஜ.கவை எதிர்த்தால் மட்டுமே திமுக கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் நீடிப்பார்கள். இதனால்தான் எங்களை தொடர்ந்து கருணாநிதி எதிர்த்து வருகிறார் என்றார்.












Click it and Unblock the Notifications