போனஸ் பெற்றனர் போக்குவரத்து ஊழியர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை கழகங்களின் ஊழியர்களுக்கு தீபாவளிபோனஸ், கருணைத் தொகை மற்றும் சரண் விடுப்புத் தொகை ஆகியவற்றின் விநியோகம் தொடங்கியது.

அரசுப் போக்குவரத்துக் கழகம், மின்வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவை உள்ளிட்ட அரசுகழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத் தொகைஆகியவற்றை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதவிர மின்வாரிய ஊழியர்களுக்கு சரண் விடுப்பை ஊதியமாக பெறுவதில் இருந்த கட்டுப்பாடுகளையும் நீக்கிஅரசு உத்தரவிட்டிருந்தது. மேலும் இடைக்கால நிவாரணத்தையும் அரசு அறிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து போனஸ், கருணைத் தொகை மற்றும் சரண் விடுப்புத் தொகையை விநியோகம் செய்யும் பணிதொடங்கியது. இந்த ஆண்டுக்கான இடைக்கால நிவாரணம் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 13மாதங்களுக்கான இடைக்கால நிவாரணத் தொகை ஆகியவையும் போனஸுடன் சேர்த்துத் தரப்பட்டது.

போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் போனஸ் மற்றும் இதர தொகைகளைப் பெற்றுச்சென்றனர். சென்னைப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் போனஸாக ரூ. 3,000, ரூ. 3,250இடைக்கால நிவாரணம் மற்றும் சரண் விடுப்பாக ரூ. 3,000 ஆக மொத்தம் ரூ. 9,250 கிடைத்தது. இதுதவிர தகுதிவாய்ந்த ஊழியர்களுக்கு விழாக்கால முன்பணமாக ரூ. 1,000ம் வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+