கருத்து கூற நக்கீரன் கோபால் மறுப்பு
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நக்கீரன் கோபால்மறுத்துவிட்டார்.
வீரப்பன் மரணம் குறித்து கோபாலின் கருத்தை அறிய நக்கீரன் அலுவலகத்தை நிருபர்கள் தொடர்பு கொண்டனர்.அப்போது இணை ஆசிரியர் காமராஜ், வீரப்பன் விவகாரம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், கோபால் கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
காயமடைந்த அதிகாரிகள்:
இதற்கிடையே வீரப்பனுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த போலீசார் தர்மபுரி அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
டி.எஸ்.பி. ஹூசேனுக்கு (53) வயிற்றில் குண்டு பாய்ந்தது. உடனடியாக தர்மபுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டஅவருக்கு குண்டு அகற்றப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தொடர்ந்து தங்க மறுத்துவிட்ட ஹூசேன்,உடனே பணிக்குத் திரும்பிவிட்டார்.
இதே போல தண்டபாணி, ராமசாமி ஆகியோரின் கை, கால்களில் குண்டுகள் உரசிச் சென்றதில் காயம்ஏற்பட்டுள்ளது.
கிரனைட் வீசிய அதிரடிப்படை:
முன்னதாக வீரப்பனை சரணடையுமாறு அதிரடிப்படை மைக் மூலம் கூறியதாகவும் அதை அவன் கேட்க மறுத்துதுப்பாக்கியால் சுட்டவுடன் வேன் மீது கிரனைட் குண்டுகளை வீசியுள்ளனர் படையினர். இதில் வேனில் முன் பக்கம்சேதமடைந்தோடு, உள்ளே இருந்த வீரப்பனும் அவனது ஆட்களும் நிலை குலைந்துள்ளனர்.
இதன் பின்னரே ஆட்டோமேடிக் துப்பாக்கிகளால் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இப்போது இந்த எண்கெளன்டரில் முக்கிய சாட்சியாக விளங்கும் ஆம்புலன்ஸ் வேனை போலீசார் துணியால் மூடிபத்திரப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications