ஹஜ் பயணம்: 82,000 பேருக்கு அனுமதி
டெல்லி:
இந்த ஆண்டு ஹஜ் கமிட்டியின் சார்பில் புனிதப் பயணம் செல்ல விண்ணப்பித்த 82,000 பேருக்கும் மத்திய அரசுஅனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10,000 பேர் கூடுதலாக விண்ணப்பித்திருந்தனர். இவர்கள் அனைவருக்கும்அனுமதி அளிப்பது என மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்தது.
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மானியமே இந்தஆண்டும் தரப்படும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், 56,000 ஹஜ் யாத்ரீகர்கள் செளதி ஏர்லைன்ஸ் மூலமும் மற்றவர்கள் ஏர் இந்தியா மூலமும்ஜெட்டா மற்றும் மதீனாவுக்கு சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு பயணிக்கு 710 அமெரிக்கடாலர் கட்டணாக வசூலிக்கப்படும். சென்னை, கொல்கத்தாவில் விமானம் ஏறும் பயணிகளிடம் தலா 780 டாலர்கள்கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications