ஆண்டிப்பட்டி ரிசர்வ் தொகுதியாவதை தடுக்க முயற்சி?
சென்னை:
40 சதவீதத்திற்கும் மேல் தலித் மக்கள் உள்ள ஆண்டிப்பட்டி தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவிக்க தேர்தல்ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தடுக்கும் முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா முழுவதும் உள்ள தொகுதிகளை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.அதன்படி, கடந்த 2001ம் ஆண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், உச்ச நீதிமன்ற முன்னாள்நீதிபதி குல்தீப் சிங்கை தலைவராகவும், மத்திய தேர்தல் ஆணையர் டாண்டனை செயலாளராகவும் கொண்டசீரமைப்பு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் அந்தந்த மாநில தேர்தல் ஆணையர்களும் உறுப்பினர்கள். தமிழகத்தில் இந்தக் கமிட்டிமேற்கொண்ட ஆய்வின்படி சில மாவட்டங்களில் தொகுதிகளைக் கூட்டவும், சில மாவட்டங்களில் தொகுதிகளைக்குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளை 4 ஆக குறைக்கவும், தலித் மக்கள் மிக அதிகமாக வசிக்கும்ஆண்டிப்பட்டி தொகுதியை (முதல்வர் ஜெயலலிதா வென்ற தொகுதி) ரிசர்வ் தொகுதியாக அறிவிக்கவும்பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், அப்படிச் செய்யப்பட்டால் அங்கு தலித் மட்டுமே போட்டியிட முடியும். இதையடுத்து இத் தொகுதியைரிசர்வ் தொகுதியாக்க அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஆண்டிப்பட்டியை ரிசர்வ்தொகுதியாக அறிவிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்காக போடப்பட்டுள்ள மாஸ்டர் பிளானின்படி, ஆண்டிப்பட்டி தொகுதியில் தலித்கள் அதிகமுள்ள 18கிராமங்களை அருகிலுள்ள தொகுதிகளான பெரியகுளத்திலும், சேடப்பட்டியிலும் சேர்த்துவிட்டு, இந்தத்தொகுதிகளில் உள்ள தலித்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளை ஆண்டிப்பட்டியுடன் இணைக்கதிட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதன் மூலம் தலித்களின் எண்ணிக்கையை குறைவாகக் காட்டி ஆண்டிப்பட்டியை ரிசர்வ் தொகுதி ஆகாமல் தடுக்கமுயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதியை ஒழிப்பது, நெல்லை மாவட்ட தொகுதிகளின்எண்ணிக்கையை 11லிருந்து 10 ஆக குறைப்பது ஆகிய நடவடிக்கைகளையும் தடுக்க அதிமுக முயற்சித்துவருகிறது. (பெரியகுளம் அமைச்சர் ஓ.பியின் தொகுதியாகும்)
-
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. மேலூர் தொகுதிக்கு மட்டும் நிறுத்திவைப்பு! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார்












Click it and Unblock the Notifications