ராமர் கோயில் கட்டியே தீருவோம்: அத்வானி
டெல்லி:
அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதை தவிர்க்கவே முடியாது என்று பாஜக தலைவர் அத்வானி கூறினார்.
இன்று டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிமுறைப்படி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தேசியத்தைக் காப்பதிலும், கலாச்சாரத்தைக் காப்பதிலும் பாஜக எப்போதும் முதலிடம் வகிக்கிறது. பாஜக அதன்அடிப்படைக் கொள்கைகளில் இருந்து விலகுவதாகக் கூறுவதில் அர்த்தமில்லை.
காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் சவால்களை சமாளிக்கும் விதமாக கட்சியை வலிமைப்படுத்துவதில் கவனம்செலுத்துவேன். 15வது மக்களவை தேர்தலை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிஅமைப்பதற்கான களமாக மாற்ற வேண்டும்.
ராமர் கோயில் கட்டுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் கட்சியின் தேர்தல் வெற்றியை பாதித்துள்ளது. அயோத்தியில்ராமர் கோயில் கட்டுவது தவிர்க்க முடியாதது.
14 ஆண்டுகளுக்கு முன்பு சோம்நாத்தில் இருந்து அயோத்தியா நோக்கி நான் தொடங்கிய ரத யாத்திரைக்குபின்னர் அப்பிரச்சினை திசை மாறியது. அதன்பின்பு பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளை ஒதுக்குவதுஎன்பது முடியாத காரியமாகிவிட்டது என்றார் அத்வானி.
வாஜ்பாய் பேச்சு:
பின்னர் பேசிய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,
அத்வானியின் தலைமையில் பாஜக புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளது. கட்சித் தொண்டர்கள் பரஸ்பரம்ஒத்துழைப்பு தந்து கட்சியை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்ல ஒத்துழைக்க வேண்டும்.
குழப்பத்தின் காரணமாகவே தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி நெடுநாள்நீடிக்காது. ஏனெனில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நாளுக்கு நாள் வேறுபாடுகள்அதிகரித்தவண்ணம் உள்ளன என்று கூறினார்.
இதனையடுத்து கூட்டத்தில் மத்திய அரக்ை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில்,
வாஜ்பாய் தலைமையிலான அரசில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் இருந்தது. அந்த வளர்ச்சிஇப்போது முடங்கிவிட்டது.
விவசாயம், உள்நாட்டு வளர்ச்சி ஆகியவற்றை காங்கிரஸ் தலைமையிலான அரசு புறக்கணித்து வருகிறது. இதுசரிசெய்யப்படவில்லை என்றால் தொழில்துறை, கட்டடத்துறை ஆகியவவையும் பாதிப்பிற்குள்ளாகும்.
மத்திய அமைச்சரவையில் கிரிமினல் குற்றவாளிகள் இடம் பெற்றுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் 3வது அதிகாரமையமாக செயல்பட்டு அரசை அச்சுறுத்துகின்றன.
உள்நாட்டுப் பாதுகாப்பில் காங்கிரஸ் அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. வட கிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்திலிருந்து ஊடுறுவிய தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த அது தவறிவிட்டது.
இவ்வாறு பாஜக தீர்மானங்களை இயற்றியுள்ளது.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications