கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!
மும்பை: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் விளாசி சாதனை படைத்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷியின் இந்த அசுரத்தனமான பேட்டிங் ஸ்டைல் மற்றும் அவரது பேட்டிங் நுணுக்கம் குறித்தும் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 12 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 97 ரன்களை குவித்தார்.

பிளே ஆஃப் போன்ற அழுத்தம் நிறைந்த போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி அட்டாக்கிங் கேமை வெளிப்படுத்தி இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வைபவ்வின் பேட்டிங் நுணுக்கங்களை சச்சின் டெண்டுல்கர் கவனித்துள்ளார்.
இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், வைபவ் சூர்யவன்ஷியின் பேட் ஸ்விங் அற்புதாமாக இருந்தது. அதைவிட இன்னும் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், தனது கால்களை நோக்கி வரும் பந்துகளுக்கு இடம் கொடுப்பதற்காக, அவர் தனது முன் காலை (Front foot) எவ்வளவு அழகாக நகர்த்தி விளையாடுகிறார் என்பதுதான்.
இந்த சுதந்திரமான அணுகுமுறைதான் அவரை அதிரடியாக விளையாட அனுமதிக்கிறது. அந்த இன்னிங்ஸை அற்புதம் என்பதை விடவும் மேலானது என்று பாராட்டியுள்ளார். இது ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஐபிஎல் பிளே ஆஃப் வரலாற்றிலேயே மிக அதிவேகமாக 16 பந்துகளில் அரைசதம் கடந்து, கிறிஸ் கெய்லின் 14 ஆண்டுகால சிக்சர் சாதனையை உடைத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.
குறிப்பாக பேட் கம்மின்ஸ் மற்றும் சாகிப் உசேன் வீசிய லெக்-சைடு பந்துகளை, சச்சின் குறிப்பிட்டது போலவே தனது முன் காலை நேர்த்தியாக நகர்த்தி மைதானத்திற்கு வெளியே வைபவ் பறக்கவிட்ட விதம் அனைவரையும் அசரடித்தது. இந்த அதிரடி ஆட்டத்தின் மூலம் 15 போட்டிகளில் 680 ரன்கள் குவித்து, இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான 'ஆரஞ்சு கேப்' பட்டியலிலும் வைபவ் சூர்யவன்ஷி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
1989ல் சச்சின் டெண்டுல்கர் எப்படி 16 வயதில் இந்திய அணிக்குள் அதிரடியாக நுழைந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தாரோ, அதேபோல தற்போது 15 வயதில் ஐபிஎல் தொடரை மிரட்டி வரும் வைபவ் சூர்யவன்ஷியை 'கிரிக்கெட் கடவுளே பாராட்டியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications