முகம்மது அலிக்கு ஜாமீன் நிபந்தனை தளர்வு
சென்னை:
போலி முத்திரைத்தாள் மோசடியில் கைதாகி தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ள முன்னாள் சிபிசிஐடி டிஐஜிமுகம்மது அலி உள்ளிட்ட 3 பேருக்கும் விதிக்கப்பட்டிருந்த நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது.
ரூ. 30,000 கோடி போலி முத்திரைத்தாள் மோசடி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முகம்மது அலி, உதவிபோலீஸ் கமிஷனர் சங்கர், எல்.ஐ.சி. அதிகாரி ராமசாமி சாது ஆகிய மூன்று பேரும் நிபந்தனை ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர்.
அவர்கள் 3 பேரும் பெங்களூல் தங்கியிருக்க வேண்டும் என சென்னை நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது. இந்தநிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரி 3 பேரும் சென்னை எழும்பூர் கூடுதல் முதன்மை குற்றவியல்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி அருள்ராஜ், முகம்மது அலி, சங்கர் ஆகிய இருவரும் பெங்களூரில் தங்கியிருக்கவேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுகிறது. அதற்குப் பதில் இருவரும் சென்னையில் தங்கியிருந்து தினசரிசிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
அதேபோல, ராமசாமி சாது மதுரையில் தங்கியிருந்து தினசரி மதுரையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications