ஊழியர் சங்கங்களுக்கு தமிழக அரசு அறிவுரை
சென்னை:
அரசு நிர்வாகம் முறையாகவும், அரசின் திட்டங்கள் மக்களை சரியாக சென்றடையும் வகையிலும், அரசுமேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாத வகையில், அரசு ஊழியர் சங்கங்கள் தங்களதுமுழு ஈடுபாட்டையும் பணியில் காட்ட வேண்டும் என்று ஊழியர் சங்கங்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கைஅனுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு வேலை நிறுத்த காலத்தின்போது அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 27 ஊழியர் சங்கங்களுக்குசமீபத்தில் தமிழக அரசு மீண்டும் அங்கீகாரம் வழங்கியது. சங்க அலுவலகங்களின் சாவிகளையும் சங்கநிர்வாகிகளிடம் அரசு சமீபத்தில் கொடுத்தது.
இந் நிலையில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுக்கு தமிழக அரசின் தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஊழியர் சங்கங்களுக்கு மீண்டும்அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதற்கான உத்தரவு இடம் பெற்றுள்ளது.
மேலும், அரசு ஊழியர் சங்கங்களுக்கு பல அறிவுரைகளும் கூறப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களும்,ஆசிரியர்களும் தங்களது பொறுப்புகளை ஒரு நொடி கூட மறந்து விடக் கூடாது. அரசு மேற்கொள்ளும்நடவடிக்கைகள் மக்களை சென்றடைய ஊழியர் சங்கங்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் குறைகள் இருக்கலாம். இருப்பினும் அவற்றை விட மக்கள்பணியாற்றுவதே முக்கியம், முதன்மையான நோக்கம் என்பதை ஊழியர்களும், ஆசிரியர்களும் மனதில் கொண்டுசெயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications