For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிவகாசி நகராட்சி அதிமுக உறுப்பினர் கொலை

By Staff
Google Oneindia Tamil News

சிவகாசி:

சிவகாசி நகராட்சியின் அதிமுக உறுப்பினர் பாஸ்கரன் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

சிவகாசி நகராட்சியின் 26 ஆவது வார்டு உறுப்பினர் பாஸ்கரன் (35). இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. பின்னர்அதிலிருந்து அவர் விடுதலையானார். இவருக்கும் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் முன்விரோதம் இருந்ததாகத் தெரிகிறது.

இந் நிலையில் சிவகாசி அருகேயுள்ள சித்துராஜபுரத்தில் தனது நண்பர் ஜெயராஜுடன் ஒரு பாஸ்கரன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இவ்விருவரையும் ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல் வழிமறித்து, பாஸ்கரனை அரிவாளால் பல இடங்களில்வெட்டியது.

இதில் பாஸ்கரன் சம்பவ இடத்திலேயை உயிரிழந்தார். தடுக்க முயன்ற ஜெயராஜூக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்தச் சம்பவம்தொடர்பாக சிவகாசி போலீஸார் வழக்குப் பதிவுசெய்து கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.

ஜெயலலிதா இரங்கல் செய்தி:

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பாஸ்கர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். இதற்குக்காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

பாஸ்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அதிமுக சார்பில் குடும்ப நலநிதியாக ரூ. 50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X