For Daily Alerts
Just In
கிரிக்கெட்: அடுத்த டெஸ்டிலும் கங்குலி இல்லை
மும்பை:
காயம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அடுத்த கிரிக்கெட் போட்டியிலும் இந்தியக் கேப்டன் செளரவ்கங்குலி பங்கேற்க மாட்டார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் மும்பையில்தொடங்குகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா தொடரைக் கைப்பற்றி விட்டது.
மேல் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாக்பூரில் நடந்த 3வது போட்டியில் கங்குலி விளையாடவில்லை.இந் நிலையில் மும்பை போட்டியில் கலந்து கொள்வதற்காக, கங்குலிக்கு இன்று உடல் திறன் பரிசோதனைநடத்தப்பட்டது.
பரிசோதனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் விக்ரம் படேல்,அடுத்த போட்டியில் விளையாடும் அளவிற்கு கங்குலியின் உடல் நலம் மேம்படவில்லை என்று தெரிவித்தார்.
Comments
Story first published: Monday, November 1, 2004, 5:30 [IST]