For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் தவறுகளை புத்தகமாக எழுதுவேன்: ராவ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எனது வாழ்க்கையில் செய்த தவறுகளை வைத்து புத்தகம் எழுத முடிவு செய்துள்ளேன். அது எனது சுய சரிதையாகஇருக்கும் என்று தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ் கூறியுள்ளார்.

எனது வாழ்க்கையில் செய்த தவறுகளை வைத்து புத்தகம் எழுத முடிவு செய்துள்ளேன். அது எனது சுய சரிதையாகஇருக்கும் என்று தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் ராவ் பேசினார். ஆளுநர் பதவியிலிருந்து நாளை விலகவுள்ள ராவ் தனதுபேட்டியின்போது மிகவும் ரிலாக்ஸ்டாக பேசினார்.

அவர் கூறுகையில், தமிழகத்தில் நான் இருந்த காலம் மிகவும் மகிழ்ச்சியானது, அதை விட நினைவுகூறத்தக்கது,மறக்க முடியாதது. தமிழகத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு புத்தகம் எழுதப் போகிறேன்.இங்கு நான் செய்த தவறுகளை அந்தப் புத்தகத்தில் கூறப் போகிறேன்.

ஆளுநர் பதவியில் இருந்தபோது தமிழக மக்கள் என் மீது காட்டிய அன்புக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.சென்னை நகரம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. நேரம் கிடைக்கும்போது மீண்டும் இங்கு வருவேன் என்றார்ராவ்.

பர்னாலா பதவியேற்பு:

இந் நிலையில் புதிய ஆளுநராக சுர்ஜித்சிங் பர்னாலா நாளை மறுநாள் பதவியேற்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X