கோவில் பிரசாதங்களுக்கு தடை கோரி வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவில்களில் பிரசாதங்கள் என்ற பெயரில் உணவுப் பொருட்களை விற்பனை செய்வதற்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில்,
திருக்கோவில்களில் பிரசாதம் என்ற பெயரில் லட்டு, புளியோதரை, பொங்கல், வடை போன்றவைவிற்பனை செய்யப்படுகின்றன.
உண்மையில் இவை பிரசாதங்களே அல்ல, மாறாக உணவுப் பொருட்கள். இந்த விற்பனை கோவில்ஆகம விதிகளுக்கு முரணானது.
இதேபோல் கோவில் குளங்களில் மீன் பிடிக்க குத்தகைக்கு விடவும் தடை விதிக்க வேண்டும் என்றுகோரப்பட்டுள்ளது.
மனுவை தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி அசோக்குமார் ஆகியோர் இன்று விசாரித்தனர்.பின்னர் இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications