எழும்பூர்-- தாம்பரம் ரயில் போக்குவரத்து தொடக்கம்
சென்னை:
சென்னையில் மீட்டர்கேஜ் பாதைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன. இன்றுஎழும்பூர்-தாம்பரம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையில் ரயில்போக்குவரத்து தொடங்கியது.
சென்னையில் இருந்து வந்த கடைசி மீட்டர் கேஜ் பாதைகளை ரூ. 90 கோடி மதிப்பில் அகற்றியுள்ளதுதென்னக ரயில்வே. எழும்பூர்-தாம்பரம் மார்க்கத்தில் இருந்து வந்த இரண்டு மீட்டர்கேஜ்பாதைகளும் அகற்றப்பட்டு புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
4 மாதங்களில் பணிகள் முடிந்து இன்று இப்பாதைகளில் ரயில் போக்குவரத்து தொடங்கியது.மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு, மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதிமாறன், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டுகொடியசைத்து புதிய ரயில் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார்கள்.
இந்தப் பாதையில் தினசரி 172 ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த எண்ணிக்கை வரும் நாட்களில்அதிகரிக்கப்படும் என்று வேலு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications