For Daily Alerts
Just In
வீரப்பனுடன் தொடர்பு: 2 தீவிரவாதிகள் கைது
திருச்சி :
வீரப்பனுடன் தொடர்பு வைத்திருந்த தமிழ்நாடு விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த இருவரை திருச்சி போலீஸார் கைது செய்தனர்.
தமிழ்நாடு விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(28), வேலு என்ற பழனிவேலு(23) ஆகிய இருவரும் வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குள்சென்றனர். இது தொடர்பாக இவர்கள் இருவரும் போலீஸாரால் தேடப்பட்டு வந்தனர்.
இந் நிலையில் டிஎஸ்பி சந்தானம் தலைமையில் திருச்சி சிபிசிஐடி போலீஸார், திருச்சி ஜங்ஷன் பஸ் நிலையத்தில் இரண்டு பேரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும்பெரம்பலூர் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள். இருவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Story first published: Thursday, November 4, 2004, 5:30 [IST]