அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம்
சென்னை: தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்ட நிலையில், அதில் மாநில பொருளாதாரம் மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நலத்திட்டங்கள் தொடருமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அது தொடர்பாகவும் நிதியமைச்சர் மரியா வில்சன் விரிவான ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பாக இன்றைய தினம் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மாநிலத்தின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது, மாநிலத்திற்கு என்ன மாதிரியான செலவுகள் உள்ளன, கடன்கள்- வட்டி என அனைத்தும் விவரமாக விளக்கப்பட்டு இருந்தது. தமிழக நிதியமைச்சர் மரியா வில்சன் இதை வெளியிட்டார்.

மரியா வில்சன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மரியா வில்சன் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விளக்கினார். மாநிலத்தின் நிதி நிலைமை குறித்துப் பேசிய நிதியமைச்சர் மரியா வில்சன், அதை குடும்ப பட்ஜெட் உடன் ஒப்பிட்டுப் பேசினார். தமிழக நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதாகத் தெரிவித்த மரியா வில்சன், கடந்த 5 ஆண்டுகளில் கடன் அளவு பெரியளவில் அதிகரித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 3ல் ஒரு ரூபாய் கடனுக்கு வட்டி செலுத்தவே செல்வதாகவும் அவர் தெரிவித்தார். நிதிநிலை மோசமாக இருப்பதாக அவர் கூறியதால் எங்கு மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் நிறுத்தப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. அது தொடர்பாகவும் நிதியமைச்சர் மரியா வில்சன் விளக்கம் அளித்திருந்தார்.
நலத்திட்டங்கள்
இது தொடர்பாக அவர், "இங்கு நான் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்கிறேன். நலத்திட்டங்கள் என்பது தமிழ்நாட்டின் பெருமைக்குரிய பாரம்பரியம்.. அந்த பாரம்பரியம் தொடரும். இங்குப் பிரச்சினை ஒருபோதும் நலத்திட்டங்களில் இல்லை. என்னெவன்றால் நலத்திட்டங்களை நீண்ட காலம் தாங்கி செல்ல தேவையான வருவாய் ஆதாரங்களை உருவாக்காமல் விட்டது தான் பிரச்சினை. அதாவது வருவாய் ஆதாரங்களை உருவாக்காமல் புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதே பிரச்சினை.
உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தின் வருவாய் குறைந்த பிறகும், அவர்கள் தொடர்ச்சியாகப் பெரிய செலவுகளை செய்வது போல தான் இது. அதேநேரம் செலுத்த வேண்டிய வரியை ஒத்திவைக்கிறார்கள். வீட்டை பராமரிக்காமல் சிதிலமடைய விடுகிறார்கள். இந்த பிரச்சினைகளைத் தனியாகச் சமாளிக்க முடியும். ஆனால், நான்கும் ஒரே நேரத்தில் நடந்தால் குடும்பமே நிதி நெருக்கடியில் தள்ளப்படும்.
8 விஷயங்கள் முக்கியம்
பொதுவாக மாநிலத்தில் நிதிநிலையை 8 விஷயங்களை வைத்து மதிப்பிடுவார்கள். கடன், நிதி பற்றாக்குறை, வருவாய் கணக்கு, சொந்த வரி வசூல் திறன், வட்டி செலவு கட்டாய செலவுகள், மூலதன செலவுகள் மற்றும் அரசின் உத்தரவாத பொறுப்புகள். இந்த 8 குறிப்பீடுகளில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களோடு ஒப்பிட்டால் நாம் தான் கடைசி இடத்தில் இருக்கிறோம்.
இந்த 4 மாநிலங்களுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பொருளாதாரம், ஒரே மாதிரியான தொழில்துறையைக் கொண்ட மாநிலங்கள். இவை கொரோனா சமயத்திற்குப் பிறகு ஒரே இடத்தில் இருந்து மீட்சி பயணத்தைத் தொடங்கின. எல்லா போட்டிகளிலும் ஒருவர் கடைசி இடத்தில் முடித்தால்.. தோல்விக்கான காரணம் வெளிப்புற சூழலில் இல்லை என்று அர்த்தம். நாம் எடுத்த முடிவுகளே இதற்குக் காரணம் என அர்த்தம்" என்றார்.
-
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
Power cut: சென்னை உள்பட தமிழகத்தில் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏன்? ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் விளக்கம் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்!












Click it and Unblock the Notifications