அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்ட நிலையில், அதில் மாநில பொருளாதாரம் மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நலத்திட்டங்கள் தொடருமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அது தொடர்பாகவும் நிதியமைச்சர் மரியா வில்சன் விரிவான ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டின் நிதி நிலைமை தொடர்பாக இன்றைய தினம் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மாநிலத்தின் பொருளாதாரம் எப்படி இருக்கிறது, மாநிலத்திற்கு என்ன மாதிரியான செலவுகள் உள்ளன, கடன்கள்- வட்டி என அனைத்தும் விவரமாக விளக்கப்பட்டு இருந்தது. தமிழக நிதியமைச்சர் மரியா வில்சன் இதை வெளியிட்டார்.

Tamil nadu White Paper

மரியா வில்சன்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மரியா வில்சன் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விளக்கினார். மாநிலத்தின் நிதி நிலைமை குறித்துப் பேசிய நிதியமைச்சர் மரியா வில்சன், அதை குடும்ப பட்ஜெட் உடன் ஒப்பிட்டுப் பேசினார். தமிழக நிதி நிலைமை மிக மோசமாக இருப்பதாகத் தெரிவித்த மரியா வில்சன், கடந்த 5 ஆண்டுகளில் கடன் அளவு பெரியளவில் அதிகரித்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் கிட்டத்தட்ட 3ல் ஒரு ரூபாய் கடனுக்கு வட்டி செலுத்தவே செல்வதாகவும் அவர் தெரிவித்தார். நிதிநிலை மோசமாக இருப்பதாக அவர் கூறியதால் எங்கு மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் நிறுத்தப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. அது தொடர்பாகவும் நிதியமைச்சர் மரியா வில்சன் விளக்கம் அளித்திருந்தார்.

நலத்திட்டங்கள்

இது தொடர்பாக அவர், "இங்கு நான் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்கிறேன். நலத்திட்டங்கள் என்பது தமிழ்நாட்டின் பெருமைக்குரிய பாரம்பரியம்.. அந்த பாரம்பரியம் தொடரும். இங்குப் பிரச்சினை ஒருபோதும் நலத்திட்டங்களில் இல்லை. என்னெவன்றால் நலத்திட்டங்களை நீண்ட காலம் தாங்கி செல்ல தேவையான வருவாய் ஆதாரங்களை உருவாக்காமல் விட்டது தான் பிரச்சினை. அதாவது வருவாய் ஆதாரங்களை உருவாக்காமல் புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியதே பிரச்சினை.

உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தின் வருவாய் குறைந்த பிறகும், அவர்கள் தொடர்ச்சியாகப் பெரிய செலவுகளை செய்வது போல தான் இது. அதேநேரம் செலுத்த வேண்டிய வரியை ஒத்திவைக்கிறார்கள். வீட்டை பராமரிக்காமல் சிதிலமடைய விடுகிறார்கள். இந்த பிரச்சினைகளைத் தனியாகச் சமாளிக்க முடியும். ஆனால், நான்கும் ஒரே நேரத்தில் நடந்தால் குடும்பமே நிதி நெருக்கடியில் தள்ளப்படும்.

8 விஷயங்கள் முக்கியம்

பொதுவாக மாநிலத்தில் நிதிநிலையை 8 விஷயங்களை வைத்து மதிப்பிடுவார்கள். கடன், நிதி பற்றாக்குறை, வருவாய் கணக்கு, சொந்த வரி வசூல் திறன், வட்டி செலவு கட்டாய செலவுகள், மூலதன செலவுகள் மற்றும் அரசின் உத்தரவாத பொறுப்புகள். இந்த 8 குறிப்பீடுகளில் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களோடு ஒப்பிட்டால் நாம் தான் கடைசி இடத்தில் இருக்கிறோம்.

இந்த 4 மாநிலங்களுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பொருளாதாரம், ஒரே மாதிரியான தொழில்துறையைக் கொண்ட மாநிலங்கள். இவை கொரோனா சமயத்திற்குப் பிறகு ஒரே இடத்தில் இருந்து மீட்சி பயணத்தைத் தொடங்கின. எல்லா போட்டிகளிலும் ஒருவர் கடைசி இடத்தில் முடித்தால்.. தோல்விக்கான காரணம் வெளிப்புற சூழலில் இல்லை என்று அர்த்தம். நாம் எடுத்த முடிவுகளே இதற்குக் காரணம் என அர்த்தம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+