நடிகை ரம்பாவின் தந்தை மீது செக் மோசடி வழக்கு
மதுரை:
நடிகை ரம்பாவின் தந்தை மீது செக் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரெங்கநாயகி பிலிம்ஸ் நிறுவனத்தின் பார்ட்னர்கள் சங்கரநாயகம் மற்றும் சரவணன். இவர்களிடம் ரம்பா, அவரதுதந்தை வெங்கடேஸ்வர ராவ், தாயார் உஷா ராணி, சகோதரர் சீனிவாஸ் ஆகியோர் ரூ. 20 லட்சம் கடன் வாங்கினர்.
த்ரீ ரோஸஸ் படத் தயாரிப்புக்காக இந்தப் பணத்தை ரம்பா வாங்கினார். படம் வெளியாகி 4 வாரத்தில் பணத்தைத் திருப்பித்தருவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்படி முதல்கட்டமாக ரூ. 7 லட்சத்துக்கு வெங்கடேஸ்வர ராவ் ஒரு செக் தந்தார். ஆனால், அதை ரெங்கநாயகி பிலிம்ஸ்நிறுவனத்தின் பார்ட்னர் சரவணன் மாற்ற முயன்றபோது பணமில்லாமல் செக் திரும்பி வந்துவிட்டது.
இதையடுத்து ரம்பா குடும்பத்தினருக்கு ரெங்கநாயகி பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அவர்கள் அதைகண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து ரம்பாவின் தந்தை மீது சரவணன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து ரம்பாவின் தந்தைக்கு சம்மன் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.