For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளச் சேதம்: அரசு மீது வாசன் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சம்பா பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியதற்கு தமிழக அரசுதான் காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் இன்று கூறினார்.

சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

பாஜக ஆட்சியில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 26 டாலராக இருந்தது. இப்போது அது 55 டாலராக உள்ளது. எனவேபெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது இதற்கு நல்ல தீர்வு ஏற்படும்.

விலையுயர்வு குறித்து தமிழக மக்களின் உணர்வை பிரதமர் மன்மோகன் சிங்கிடமும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம்தெரிவித்தேன்.

அதிமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்துதான் திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. பெட்ரோலியப் பொருட்களின்விலையை வரும் நாட்களில் குறைக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்துகிறது.

அதிமுகவும், பாஜகவும்தான் சர்வதேச சந்தை நிலையை உணர்ந்தும் உணராததுபோல செயல்படுகின்றன. இது தவறானதாகும்.

காவிரி டெல்டா பகுதியில் 80 சதவீத பயிர்கள் மழையால் சேதமடைந்தற்கு தமிழக அரசுதான் காரணம். மாநில அரசு உரியநேரத்தில் ஆறு, கால்வாய்களை தூர் வாரியிருந்தால் இவ்வளவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்காது. எனவே விவசாயிகளுக்குஉரிய நஷ்டஈட்டை வழங்குவது தமிழக அரசின் கடமை என்று கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X