For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடந்த ஆண்டே புதிய மடாதிபதி தேர்வு?

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

கைதான ஜெயேந்திரர் மற்றும் இளையவர் விஜயேந்திரரை அடுத்து சங்கர மடத்தின் அடுத்த மடாதிபதி பதவிக்கு ஒரு வாலிபர்கடந்த வருடமே தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.

கொலை வழக்கில் ஜெயேந்திர சரஸ்வதி கைதாகிவிட்ட நிலையில், அவர் தனது பதவியைத் துறந்தால் அப் பதவிக்குஇளையவரான விஜயேந்திரர் வரலாம். ஆனால், விஜயேந்திரரின் தம்பி ரகு தான் கொலையாளிகளையே தயார் செய்தார் என்றுகூறப்படும் நிலையில் இளைவரின் பெயரும் இந்த விவகாரத்தில் சிக்கி பிரச்சனையாகிவிட்டது.

விஜயேந்திரரும் கைதாகக் கூடும் என்று கூறப்படுவதால், காஞ்சிக்கு வராமல் ஆந்திராவிலேயே தங்கியிருக்கிறார்.

Raghu
கொலைத் திட்டம் தீட்டிய விஜயேந்திரரின் தம்பி ரகு

ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மடத்தில் கடந்த 3 நாட்களாக யாகம் தொடங்கிய அவர் அதை நேற்று முடித்தார். இதையடுத்துகாஞ்சி வருவார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அவர் இப்போதைக்கு காஞ்சிபுரமோ, சென்னைக்கோ வர மாட்டார் என்றுகூறப்படுகிறது.

ஜெயேந்திரர் ஜாமீனில் வெளியே வந்தால் மட்டுமே விஜயேந்திரர் தமிழகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

விஜயேந்திரரின் தம்பி ரகுதான் கொலையாளிகளுக்குப் பணப்பட்டுவாடா செய்தவர் என்று போலீஸ் தரப்பு கூறுவதுகுறிப்பிடத்தக்கது. இரு மடாதிபதிகளும் காஞ்சிபுரத்தில்இல்லாததால், சங்கர மடம் சுத்தமாக செயலிழந்து போயுள்ளது.

இதற்கிடையே விசாகப்பட்டினம் சாரதா பீடம் ஸ்வரூபானந்த் சரஸ்வதி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,இளைய மடாதிபதியாக இருக்கும் விஜயேந்திரர் மடாதிபதியாக பொறுப்பேற்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றுகூறியுள்ளார்.

புதிய மடாதிபதி தேர்வு:

இதற்கிடையே இந்த இருவருக்கும் பிறகு மடத்துக்குத் தலைமை தாங்க கடந்த ஆண்டே ஒருவர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாககாஞ்சி மடத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜோதிட விற்பன்னர்களால் தேர்வு செய்யப்பட்ட அவர், அடுத்த வருடம் தை மாதத்தில் வாரிசாக அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட இருந்ததாகவும் தெரிகிறது.

காஞ்சியில் உள்ள வேத பாடசாலையில் இருந்து இவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், அவருக்குப் பதிலாக கும்பகோணம் பாடசாலையைச் சேர்ந்தவரை தேர்வு செய்ய வேண்டும் என மடத்திலேயே எதிர் குரல்கள் எழ ஆரம்பித்திருந்தாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொலை விவகாரம் வெடித்துவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X