மாறன் நினைவு தினம்: திமுக அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு திமுக தலைவர்கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாறன் மரணமடைந்து இன்றுடன் ஒரு ஆண்டு ஆகிறது. இதையொட்டி முரசொலி- குங்குமம் வார இதழ் அலுவலக வளாகத்தில்அமைக்கப்பட்டுள்ள மாறனின் உருவச் சிலைக்கு ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கருணாநிதி, பொதுச் செயலாளர் க.அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, மத்தியஅமைச்சரும் மாறனின் மகனுமான தயாநிதி உள்ளிட்ட தலைவர்கள், கட்சிப் பிரமுகர்கள் மாலை அணிவித்தனர்.
இன்று மாலை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் கலந்து கொள்ளும்மாறன் நினைவு தினக் கூட்டமும் நடைபெறவுள்ளது.












Click it and Unblock the Notifications